திங்கள், 16 ஜூலை, 2012
வியாழன், 12 ஜூலை, 2012
RMSA தொடர்ச்சி
டிசம்பர் மாதம் ஒதுக்கிய இந்த நிதியைத் தொடர்ந்து மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில் அறிவியல் உபகரணங்களும், நூலகத்திற்கான புத்தகங்களும் வாங்கப்பட்டன.ஓராண்டு இணையதளக்கட்டணம் கட்டப்பட்டது. தன்னார்வலர் ஒருவரை நியமித்து அவருக்கு மூன்று மாத சம்பளம் கொடுத்து 9ம் வகுப்பு மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அறிவியல் உபகரணங்களை ஆய்வகத்தில் அடுக்கி வைத்தாயிற்று.10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு செய்வதற்கு நீர் வசதி வேண்டும்.அதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டு சிறப்பாக செய்முறைத் தேர்வுகள் நடை பெற்று அறிவியலில் எம் மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி காட்டினர்.
இது சென்ற கல்வியாண்டின் நிலை,ஆக்கப் பாதைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு முயன்றாலும் ,ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை தான்,மீண்டும் மோட்டார் பழுது!
டிசம்பர் மாதம் ஒதுக்கிய இந்த நிதியைத் தொடர்ந்து மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதில் அறிவியல் உபகரணங்களும், நூலகத்திற்கான புத்தகங்களும் வாங்கப்பட்டன.ஓராண்டு இணையதளக்கட்டணம் கட்டப்பட்டது. தன்னார்வலர் ஒருவரை நியமித்து அவருக்கு மூன்று மாத சம்பளம் கொடுத்து 9ம் வகுப்பு மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அறிவியல் உபகரணங்களை ஆய்வகத்தில் அடுக்கி வைத்தாயிற்று.10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு செய்வதற்கு நீர் வசதி வேண்டும்.அதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்பட்டு சிறப்பாக செய்முறைத் தேர்வுகள் நடை பெற்று அறிவியலில் எம் மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி காட்டினர்.
இது சென்ற கல்வியாண்டின் நிலை,ஆக்கப் பாதைக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு முயன்றாலும் ,ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை தான்,மீண்டும் மோட்டார் பழுது!
RMSA திட்ட செயல்பாடுகள்
RMSA (ராஷ்ட்ர மத்ய சிக்க்ஷா அபியான்) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான அவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
எங்கள் பள்ளியில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ,குடிநீருக்கான மின் மோட்டார் பழுது நீக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி 6 குழாய்கள் பொருத்தப்பட்டு மாணவியருக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.
மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு கழிவறைகளில் நீருக்கான ஏற்பாடு செய்து தரப்பட்டது.
மேலும் உடைந்த ஜன்னல்கள் ஒட்டவைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.(வெல்டிங்)
மேலும் குண்டும்,குழியுமாக இருந்த தரைத்தளம் பழுது நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
பழுதடைந்த கணினிகள் பழுது நீக்கம் செய்யப்பட்டதோடு,UPS ,Speaker வாங்கப்பட்டது.
RMSA (ராஷ்ட்ர மத்ய சிக்க்ஷா அபியான்) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக்கு தேவையான அவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.
எங்கள் பள்ளியில் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் ,குடிநீருக்கான மின் மோட்டார் பழுது நீக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி 6 குழாய்கள் பொருத்தப்பட்டு மாணவியருக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.
மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு கழிவறைகளில் நீருக்கான ஏற்பாடு செய்து தரப்பட்டது.
மேலும் உடைந்த ஜன்னல்கள் ஒட்டவைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.(வெல்டிங்)
மேலும் குண்டும்,குழியுமாக இருந்த தரைத்தளம் பழுது நீக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
பழுதடைந்த கணினிகள் பழுது நீக்கம் செய்யப்பட்டதோடு,UPS ,Speaker வாங்கப்பட்டது.
செவ்வாய், 10 ஜூலை, 2012
பள்ளியில் கலைநிகழ்ச்சிகள்
சிறப்பாக நடனம் ஆடும் எம் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவியர்
பட்டி மண்டப நிகழ்வில்லாத விழாக்கள் உண்டா தொலைக் காட்சியில் ?எம் பள்ளியிலும் கல்வியா?செல்வமா? என பட்டிமண்டபம் நிகழ்த்திய எமதருமை மாணவிகள்.
பள்ளி மாணவியருக்குப் பரிசு
மேலும் 400 க்கு மேல் எடுத்த 18 மாணவியருக்கு கோவையிலுள்ள அறக்கட்டளை வாயிலாக ஒவ்வொரு மாணவிக்கும் தலா 5000 ரூபாய்
வீதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளதோடு அவர்கள் தம்
பெற்றோருடன் சென்று வருவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருகின்றார்
மாணவர் தம் கல்வி மேம்பாட்டிற்காக உழைப்போரைப் போற்றுவோம்.
ஞாயிறு, 8 ஜூலை, 2012
மேல்நிலைப் பள்ளி
1989 ல் ஆண்கள் பள்ளியிலிருந்து பிரிந்து அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியாக
செயல்படத் தொடங்கியது.நல்ல தேர்ச்சி விழுக்காட்டுடன் மாணவியர் சிறப்பாகப் படித்துத் தேறினர்.
மீண்டும் +1 ,+2 பயில்வதற்கு அருகிலுள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.மாணவியரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்த சூழ்நிலையில் மகளிர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினால் நல்லது என்ற எண்ணம் எழுந்தது.22 ஆண்டுகளுக்குப் பின்னர் 2012ல் இந்தப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
இடைநிற்றலைத் தவிர்ப்பதற்கான பத்திரங்களை வழங்குவதற்கு குடியரசு தினத்தன்று வருகை புரிந்த சட்டமன்ற உறுப்பினரிடமும், அரசுப் பொதுத் தேர்வு எழுதச் செல்லும் பத்தாம் வகுப்பு மாணவியரை வாழ்த்த வந்திருந்த ஒன்றியத் தலைவரிடமும் எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.
2012 ல் தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று.திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 2 பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று என்பதில் எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி.
சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வருகை புரிந்து மாணவியர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)